அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

ஆதி தகப்பன் யார் ??



தேவன் ஆதாம் ஏவாளை எதற்காக சிருஷ்டித்தாரோ அந்த நோக்கத்தை மனிதன் நிறைவேற்றாமல் போனப்படியால் மனிதன் தன் சுயபுத்தியின் மேல் சார்ந்த தேவனின் அற்புதமான திட்டத்தை குலைத்து போட்டப்படியினாலும் ஆவி ஆத்துமா சரித்துடன் நித்திய காலம் வாழ வேண்டிய மனிதன் தேவனாலே படைக்கப்பட்டு தன்னை படைத்த தேவனுக்கே விரோதமாக எழும்பின பிசாசின் தந்திரமான (லூசிபர்)சொல்லை கேட்டு தேவனுடைய அன்பை உதாசீனப்படுத்தினப்படியாவ் தேவமகிமையை இழந்தான்.





தேவன் மறுபடியும் ஒரு தேவபக்தியுள்ள சந்ததியை உருவாக்க நினைத்தார்.அப்போழுது தேவன் கல்தேயருடைய ஊர் என்ற தேசத்தில் உத்தமனாக வாழ்ந்து கொண்டிருந்த ‘ஆபிராம்’ என்ற மனுஷனை அழைத்து நீ உன் தேசத்தையும் இனத்தையும் வீட்டையும் விட்டு புறப்பட்டு நான் காண்பிக்கும் தேசத்துக்கு போ என்றும் நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்றும் நீ திரளான ஜாதிகளுக்கு தகப்பனாவாய என்றும் இனி உன் பெயர் (A’BRAM) என்னப்படாமல் நான் உன்னை திரளான ஜாதிகளுக்கு தகப்பனாக ஏற்படுத்தினபடியால் உன் பெயர் ஆபிரகாம் (ABRAHAM) எனப்படும் என்றார்.


தேவனுடைய ஆசிர்வாதத்தின்படியே ஆபிரகாமுக்கு (A’BRAHAM) முதல் மனைவியாகிய சாராளின் (SARAH) மூலம் ஈசாக்(ISAAC) பிறந்தான்.சாராள் சுமேரிய நாகரிகத்திற்கு (SUMARIAN CIVILIZATION)அடையாளமாக காணப்படுகிறாள். இவரது மகன் ஈசாக்கு பிறந்த யாக்கோபு மூலம் 12-கோத்திரங்கள் பிறந்து கானான் எகிப்து முழுவதும் பரவி ‘இஸ்ரவேல்’(ISRAEL) தேசமானது. இவர்கள் தான் யுத மதம் உருவாக காரணமானவர்கள். இவர்களின் கோத்திரங்களிலிருந்து மேற்கத்திய மக்களின் சந்ததி உருவானது.இவர்கள் தங்களது ஆதி தகப்பன் ஆபிரகாம் (A’BRAHAM)  அதாவது எபிரெய மொழியில் உயிர் எழுத்துக்கள் இல்லாமையால் தங்களது ஆதிதகப்பன் ‘BRHM’ என்றே அழைத்தனர்.



அடுத்து இந்த ஆபிரகாமுக்கு ஆகார்(HAGAR) என்ற எகிப்திய பெண் மூலம் இஸ்மவேல் (ISHMAEL-ISHMAIL)என்ற மகன் பிறந்தான்.அவன் மூலம் 12-கோத்திரங்கள் பிறந்து மத்திய கிழக்கு நாடுகளில் பரவி ‘ அரேபியர்கள்’ என அழைக்கப்பட்டனர்.இந்த ஆகார் எகிப்திய நாகரிகத்திற்கு அடையாளமாக இருக்கிறாள்.


அப்போது ‘இஸ்லாம்;’ என்ற மதம் கிடையாது கி.பி 6ம் நூற்றாண்டுகளில் இஸ்லாம் உருவாகி அனைத்து இஸ்லாமிய தேசத்தினரும் ஆதிதகப்பன் I’BRAHIM(A’BRAHAM-BRHM)யிலிருந்து தோன்றினவர்கள் என்றே உரிமை கொண்டாடுகின்றனர்.



சாராள் இறந்தபின் ஆபிரகாம் கேத்துராள் (KETHURA) என்ற பெண்ணை திருமணம் பண்ணினார்.இவளுக்கு 6 பிள்ளைகள் பிள்ளைகளுக்கு பிள்ளைகள் பிறந்து நெருக்கமானபோது இந்தத மறுமனையாட்களின் பிள்ளைகளுக்கு நன்கொடைகளை கொடுத்தது ஈசாக்கை விட்டு கிழக்கே கீழ் தேசத்திற்கு அனுப்பி விட்டார்.கேத்தூராள் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு (HINDUS CIVILIZATION)  அடையாளமாக காணப்படுகிறாள்.கீழ் தேசத்திற்கு குடியேறிய இந்த சந்ததிக்கும் ஆபிரகாம் ஆதிதகப்பன்.


பிற்காலத்தில் இந்தியாவின் மீது படையெடுத்த வந்த கைபர் போலன் வழியே நுழைந்த பாரசீகர் (கி.மு 600) கிரேக்கர் (கி.மு 400)சகர் (கி.மு 200) குஷாணர் (கி.பி 100) ஹீனர்கள் (கி.பி 400)மற்றும் வியாபாரத்திற்கு இந்தியாவிற்குள் நுளைந்த ரோமர்கள் (கி.மு 400) இவர்கள் காலப்போக்கில் ஆரியர் (வெளிநாட்டவர்) ஒருங்கிணைந்து ஆரியவர்த்தாமார்க்கம் உருவாக்கினர்.இதில் ஒரு பகுதியினர் தங்களை பிராமணர்கள் (BRAHMINS)  என்றும் பிரமத்திலிருந்து (BRHM) பிறந்தவர்கள் என்று அதாவது ஆபிரகாமிலிருந்து (A’BRAHAM-BRHM) பிறந்தவர்கள் என்றே கூறுகின்றனர்.


ஆபிரகாம் முதல் எபிரெயன் எபிரெய மொழியில் ஆபிரகாம்-BRHM பிரம்(பிரம்மா) என்றே அழைக்கப்பட்டார்.ஆகவே உலகத்தின் அனைத்து மக்களுக்கும் ஆதி தகப்பன் ஆபிரகாம் (A’BRAHAM),இப்ராஹிம் (I’BRAHIM) பிரம் (BRHM) ஆவார்.





 

Post Comment


3 comments:

Unknown said...

நல்ல ஆய்வு, இதில் இன்னொரு விஷயம், ஆபிரகாமின் மனைவி சாராள், பிராமணன் மனைவி சாரா ஸ்வதி... is this co incidence or history?

டிலீப் said...

//கார்பன் கூட்டாளி said...
நல்ல ஆய்வு, இதில் இன்னொரு விஷயம், ஆபிரகாமின் மனைவி சாராள், பிராமணன் மனைவி சாரா ஸ்வதி... is this co incidence or history?//

தகவலுக்கு நன்றி கார்பன்.சரித்திரம் என்று நான் நினைக்கிறேன்
கருத்துக்கும் வருருகைக்கும் நன்றி நண்பரே

Unknown said...

சரியே.. ஆனால் சிறு திருத்தம்.. சிந்து சமவெளி கேத்தூராளின் பிள்ளைகளுடையது அல்ல.. அது தமிழர்களுடையது; அதனை கேத்தூராளின் பிள்ளைகள் கைப்பற்றினர்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.