இயற்கையாக அமைந்துள்ள பூமியின் அமைப்பில் எவ்வாறு நிலநடுக்கம் தோன்றுகிறது, நிலநடுக்கத்தின் விளைவுகள் என்ன என்பதை கம்ப்யூட்டர் பிரௌசர் வாயிலாக விவரங்களை தெரிவிக்கும் புதிய முறையினை இங்கிலாந்தின் எடின்பெர்க் பல்கலை. கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக நிலநடுக்கம் மிதமானதாகவும், பெரிய அளவிலும் ஏற்படும் அதனை சிஸ்மோ கிராப் எனும் ரிக்டர் அளவு கோலில் கணிக்க முடிகிறது. தற்போது புதிய முறையில் நிலநடுக்கத்தின் ஒலிகளைக்கூட துல்லியமாக கணித்தும் விளைவுகளை வரைபடம் மூலம் அதி சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதனை பிரௌசின் செய்தவுடனே முழு விவரங்களும் கிடைத்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை சில பூகம்ப ஆராய்ச்சியாளர்கள் சரியானவையாக கருதுகின்றனர். இது போன்ற முறையானது ஐரோப்ப கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இத்தகைய அதி சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடனே தகவல்கள் அனுப்பிவிடும்.
0 comments:
Post a Comment