
பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக் கொள்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக் கொள்வதில்லை.
வால் இல்லாத பல்லியைக் காணும்போதும், "வாலறுந்த பல்லி' என்று சொல்கின்றனர். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு இருப்பதாகக் கேள்விப்படும் போது, நம்புவதே அரிதாக உள்ளது.
பல்லிக்கு, தான் விரும்பும் நேரத்தில் தனது வாலைக் கழற்றிப்போடும் திறன் உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன், உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாகக் கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த எதிரி குழம்பிப் போய் இருக்கும்போது, எளிதில் தப்பித்துக்கொள்ள அதற்கு வசதியாக உள்ளது.
சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் முளைத்துவிடும் என்பதால், பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த இழப்பும் இல்லை.
3 comments:
thanks for sharing. good.
நல்ல தகவல் நண்பா
நன்றி மதுரை,சிவா....
Post a Comment