
சூரியனின் வெளிப்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிப்பால் கிளம்பிய வெப்ப அலைகள் பூமியை நோக்கி விரைந்து வருகின்றன.
அவை இன்று பூமியை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. வெப்பத்தில் தகிக்கும் சூரியனின் வெளிப்புறத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரண்டு ஒளிக்கீற்றுகள் வெளியானதை அமெரிக்க விண்வெளி நிலையத்தின் (நாசா) லேட்டஸ்ட் செயற்கைக் கோள் பதிவு செய்தது. அதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். வெப்பத்தை இதுவரை இல்லாத அதிக அளவில் ஓரிடத்தில் இருந்து சூரியன் வெளியேற்றியதாக கூறினர்.
வாண வேடிக்கை போல நடந்த இந்த ஒளி வீச்சு, பூமியை விட பெரியது என்றும், வெளியேற்றப் பட்ட வெப்ப அலைகள் பூமியை நோக்கி வேகமாக வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மணிக்கு 9.3 கோடி மைல்கள் வேகத்தில் பூமியை நோக்கி வரும் ‘சூரிய சுனாமி’ அலைகள், இன்று காலை பூமி வளி மண்டலத்தை தாக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அவை பூமியைக் காக்கும் இயற்கை காந்த பரப்பை கடுமையாக தாக்கும். அதனால், பிரிட்டன் உட்பட சில நாடுகளில் தகவல் தொடர்பு பாதிக்கப் படக்கூடும். விண்வெளியில் செயற்கைக் கோள்கள் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரியனில் இருந்து பூமியை நோக்கி மிகப் பெரிய அளவில் வெப்ப அலைகள் வெளியாவது இதுவே முதல்முறை. இதுபோன்று அடுத்தடுத்து இரண்டு முறை சூரிய சுனாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனினும், முதலில் வெளியான அலைகள் பூமியை விடப் பெரிய அளவில் இருந்ததாக அவர்கள் கூறினர்.
சூரியனிடம் இருந்து பூமியை நோக்கி வெப்ப அலைகள் வெளிப்பட்டுள்ளதால், வளிமண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் வானிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
0 comments:
Post a Comment