35-வது ஓவரை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வீசினார். முதல் பந்தை ஷேவாக் அடிக்காவிட்டாலும், விக்கெட் கீப்பர் சங்கக்கரா பிடிக்க தவறியதால் அது பவுண்டரிக்கு ஓடியது.
இதனால் `பைஸ்' வகையில் இந்தியாவுக்கு 4 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து வெற்றி, சதம் இரண்டுக்கும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.
அடுத்த 2 பந்துகளில் ஷேவாக்கால் ரன் எடுக்க முடியவில்லை. 4-வது பந்தை ஷேவாக் `லாங்-ஆப்' திசையில் அட்டகாசமாக சிக்சருக்கு தூக்கினார். சதத்தை எட்டி விட்டதாக ஷேவாக் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டதால், ஷேவாக்கின் 13-வது சத வாய்ப்பு நழுவியது.
அவர் திட்டமிட்டு நோ- பாலாக வீசியது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் சதத்தை எட்டாவிட்டாலும் ஷேவாக் கவலைப்படவில்லை. ஷேவாக் கூறும் போது `கிரிக்கெட்டில் இப்படி அடிக்கடி நடக்கும்.
அதாவது பேட்ஸ்மேன் 99 ரன்களில் இருக்கும் போது, அணியின் ஸ்கோரும் சமமாக இருந்தால், பவுலர்கள் நோ-பால் அல்லது வைடாக போடத்தான் முயற்சிப்பார்கள். இது தான் கிரிக்கெட். அவர்களுக்கு இது நியாயம் தான். இது ஒரு பிரச்சினை இல்லை' என்றார்.
சேவாகிடம் மன்னிப்பு கேட்டார் ரந்தீவ்:
நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் சேவாக் 99 ரன்கள் எடுத்தார். அப்போது இலங்கை பவுலர் ரந்தீவ் வேண்டும் என்றே நோ பால் போட்டு தன்னை சதம் அடிக்க விடாமல் தடுத்ததாக சேவாக் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் ரந்தீவ் சேவாகை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment