அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் . டெஸ்ட் போட்டியில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.



21 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் கிரிக்கெட்டின் சகாப்தமாக திகழ்கிறார்.
 
டெண்டுல்கரை பாராட்டும் விதமாக லண்டனை சேர்ந்த கிரகென் மீடியா நிறுவனம் அவரை பற்றிய சுயசரிதை புத்தகத்தை வெளியிடுகிறது. சிறப்பு புத்தகம், சாதாரண புத்தகம் என்று 2 வகைகளில் தெண்டுல்கரின் சுயசரிதை வெளியிடப்படுகிறது.
 
சிறப்பு புத்தகத்தில் டெண்டுல்கர்  ரத்தத்தில் கையெழுத்திட்டது இருக்கும். உயர்தர காகிதத்துடன் தங்க இலைகளுடன் கூடிய வகையில் இந்த புத்தகம் இருக்கும். இதில் தெண்டுல்கர் பற்றி அனைத்து தகவல்கள், அபூர்வ தகவல்கள், புகைப்படங்கள் இருக்கும்.


 

852 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். 3.7 கிலோ எடை கொண்டது. சிறப்பான இந்த புத்தகம் மொத்தம் 10 பிரதிகளே வெளியிடப்படுகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசத்தில் நடக்கிறது. அந்த சமயத்தில் அதாவது பிப்ரவரி மாதம் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.
 
மும்பையில் பள்ளி கட்டிடம் கட்ட தெண்டுல்கரின் அறக்கட்டளை உதவுகிறது. அதற்காக இந்த சிறப்பு புத்தகம் வெளியிடப்படுகிறது.

இதேபோல சாதாரண புத்தகம் ஆயிரம் பிரதிகளில் வெளியாகிறது. இதன் விலை ரூ.92 ஆயிரம் முதல் ரூ.1.38 லட்சம் வரை இருக்கும்.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.