அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

பிரபஞ்சத்தில் விபரீதம்





சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இது, தூசிகளும், சிறியதும்  பெரியதுமான பாறைகளையும் கொண்டது.


இந்த பாறைகளும், தூசிகளும், பூமியைப் போல் சூரியனை வலம் வந்து கொண்டிருக் கின்றன. இவை சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக ஈர்க்கப்படுகின்றன. இதனால், அவை  பூமியின் ஈர்ப்பு பாதைக்குள் வந்து, காற்று மண்டலத்தில் நுழைந்து, பூமியை நோக்கி மிக வேகமாக ஊடுருவுகின்றன. அப்போது, காற்றின் உராய்வு காரணமாக தீப்பிடித்து அவை எரிந்து போய் விடுகின்றன. இவை தான்  எரிகற்கள் என அழைக்கப்படுகின்றன. 

நாசாவின் சமீபத்திய ஆய்வில்  தூசிகள், பாறைகள் கொண்ட பிரமாண்டமான ஒரு  தூசி மண்டலம் கண்டறியப்பட்டுள்ளது. நாசா அனுப்பியுள்ள ஹம்பிள் விண்வெளி தொலைநோக்கி இதை கண்டுபிடித்துள்ளது.

ஹம்பிள் தொலை நோக்கி மூலம், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில், கடந்த மாதம் இரண்டு சிறிய கோள்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக புதியதாக ஒரு தூசு மண்டலம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சூரியனில் இருந்து 18 கோடி மைல் தூரத்திலும், பூமியில் இருந்து ஒன்பது கோடி மைல் தூரத்திலும் இந்த தூசி மண்டலம் காணப்படுகிறது. இதன் பெயர் பி/2010 ஏ2 என்பதாகும்.




ஒரு கட்டடத்தின் இடிந்த பாகங்களை போன்று இந்த தூசி மண்டலம் காட்சி அளிக்கிறது. இந்த தூசி மண்டலம் ஒரு ஓடைபோல் வேகமாக நகர்ந்து வருகிறது. மணிக்கு  11 ஆயிரம் மைல் தூரம் கடக்கிறது. இது, ஒரு துப்பாக்கியில் இருந்து செல்லும் புல்லட்டின் வேகத்தை விட, ஐந்து மடங்கு அதிகம். வால்நட்சத்திரத்தின் முக்கிய பாதை போன்று, இந்த தூசி மண்டலம் அமைந்துள்ளது அபூர்வமானது என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஜனவரி இறுதியில் இந்த தூசி மண்டலத்தின் மையப் புள்ளியை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, இதன் தோற்றம் வழக்கமாக காணப்படும் சிறிய கோள்களை போன்று இல்லாமல் வேறுபட்டு இருப்பது கண்டறியப்பட்டது.


 பிரபஞ்ச வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தை தொலைநோக்கி மூலம் காணும் போது, அது இழை போன்று நீண்டு, எக்ஸ் வடிவில் காட்சியளிக்கிறது.

இந்த தூசி மண்டலத்தை நிறமாலை பகுப்பு முறையில் ஆய்வு செய்ததில், இது, "புளோரா' கோள் குடும்பத்தை சேர்ந்தது என்றும், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதலில் உடைந்ததால் பி/2010 ஏ2  தூசி மண்டலம் தோன்றியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு வந்த ஒரு பொருள் மோதி தான் பூமியில் இருந்த டைனோசர்கள் அழிந்தன. ஆனால், அதுபோன்ற மோதல்கள் தற்போது ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.


 *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***


                                   

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.